Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவள்ளூர்: சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் அண்ணாநகரில் வசித்து வந்தவர் ராஜேஷ்வரி/62.இவரது கணவர் சுப்ரமணி இறந்த பின்பு ரஜேஷ்வரி தனியாக வசித்து வந்தார். ராஜேஷ்வரியின் மகன் முருகன் தாய் வீட்டின் அருகே வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று மதியம் வீட்டில் தனியாக இருந்த ராஜேஷ்வரிகுளித்த பின்பு வீட்டின் முன்பாக உட்கார்ந்து தலை வாரி கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டின் முன்புறம் இருக்கக்கூடிய பால்கனி இடிந்து விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ராஜேஷ்வரி உயிர் இழந்தார். பால்கனி இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ராஜேஸ்வரி உடலை மீட்க போராடினர். ஆனால் ராஜேஷ்வரியின் உடல் இடிபாடுகளுக்குள் சிக்கியதால் உடலை மீட்க முடியவில்லை.
உடனடியாக ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் ராஜேஷ்வரியின் உடலை மீட்டனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த பட்டாபிராம் காவல்துறை ஆய்வாளர் விஜயலட்சுமி உயிரிழந்த ராஜேஷ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த ராஜேஷ்வரியின் வீடுகட்டப்பட்டு 20 ஆண்டுகள் ஆகியுள்ளது. அதேபோல் வீட்டின் நுழைவாயில் மேற்புறம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழுதுபார்க்கப்பட்டுள்கது. இந்த நிலையில் தான் தற்போது விபத்து ஏற்பட்டுள்ளது. மூதாட்டி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.